www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

சமத்துவ நாயகர், புன்னகை தமிழன், மக்கள் செல்வர் அழைக்கிறார்

( Veera Vetri Pandiyan அவர்கள் பதிவு)

#சமத்துவ_நாயகர்_அண்ணன்_டிடிவி :

#இமானுவேல்சேகரனாருக்கு_அஞ்சலி_செலுத்த_மக்கள்_செல்வர்_தலைமையில்_அணி_திரள்வோம்...

#சகோதரத்துவம்_காப்போம்_பிரிவினைவாதத்தை_முறியடிப்போம்...

முத்துராமலிங்க தேருக்கு ஆதரவாக அனைத்து சமூகத்தினரும் குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரும் ஆதரவாக இருப்பதை தடுக்க அப்போதைய காங்கிரஸ் அரசு, தன் அரசு எந்திரத்தை பயன்படுத்தி தீட்டப்பட்ட சதித்திட்டமாவே அந்த இனக்கலவரத்தை பார்க்கிறேன். பிற்படுத்தப்பட்ட முக்குலத்தோருக்கும், தாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளருக்கும் ஒரு சண்டை உருவாக்கப்பட்டது. ஐயா முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு எதிராக ஐயா இமானுவேல் சேகரனார் என்ற தேவேந்திரகுல வேளாளர் இனத்தை சேர்ந்தவரை தூண்டிவிட்டனர். இதை அறியாத சிலர் அவரை படுகொலை செய்ததால், அதை முத்துராமலிங்க தேவருக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை கையில் எடுத்தது காங்கிரஸ். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது காங்கிரஸ் அரசு. ஒன்று கொலைப்பழி அவர் மீது திணிக்கப்பட்டது. அடுத்து தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கியை அவருக்கு எதிராக மாற்றியது. கொலைப்பழியை முறியடித்த முத்துராமலிங்க தேவர் அவர்கள்,  அவர்களின் வாக்கு வங்கியை கடைசி வரை பெறமுடியவில்லை. மேலும் கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு பிரிவினருக்கும் இடையே மோதல் இருந்துகொண்டே வந்த்து. இதில் முக்கியமான அம்சம் முத்துராமலிங்க தேவர் அவர்கள் மிகவும் நேசித்தது தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை, அந்த சமுதாயத்தினரும் இவரையே ஆதரித்தனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு பின் இரண்டு சமுதாயத்தினரையும் எதிர் துருவங்களாக மாற்றியது காங்கிரஸ் அரசு. ஆனால் கிடட்டத்தட்ட 50 ஆண்டு பிணக்குகள் அத்தனையும் தவிடுபொடியாக்கிவிட்டார் மக்கள் செல்வர். இன்று இமானுவேல் சேகரனார் நினைவிடத்திற்கு தேவேந்திரகுல வேளாளர்களுடன் இணைந்து முக்குலத்தோரும் மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களும் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு முக்குலத்தோருடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மற்றும் மற்ற சமூகத்தினரும் அஞ்சலி செலுத்துகின்றனர். சட்டம் செய்யமுடியாததை, அடக்குமுறை செய்யமுடியாததை அன்பு என்ற ஆயுதத்தால் செய்ய முடியும் என்பதை்நம்புகிறேன். அவரின் நடவடிக்கையை நான் இந்த புரிதலுடன் பார்கிறேன்... இது போன்ற புரிதலே மனித நேயத்தையும், மதசார்பின்மையையும், சமூகநீதியையும் காக்கும் என நம்புகிறேன்.

//இறுதியாக  மதுரை மீனாட்சியம்மன் கோவில் தலித் ஆலையப்பிரவேசத்திற்கு காரணமாக இருந்த...ஐயா முத்துராமலிங்கதேவருக்கும், தியாகி இமானுவேல் சேகரனார் கொலைக்கும் சம்மந்தம் இல்லை என்பது தான் நிலைப்பாடு. இருதரப்பினருக்கும. ஏற்பட்ட மனப்பிணக்குகளை அப்போது இருந்த காங்கிரஸ் அரசு பயன்படுத்தி கொண்டு தேவேந்திரகுல வேளாளர் வாங்கு வங்கியை அபகரித்ததுடன்...முத்துராமலிங்க தேவரை பழிவாங்கவும் பயன்படுத்திக்கொண்டது. இருந்தபோதிலும் அன்றைய சூழலில் சாதிய ஒடுக்குமுறை இருந்தது என்பதையும் ஒத்துக்கொண்டு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான குறியீடாக மதிக்கபட வேண்டியவர் தியாகி இமானுவேல்சேகரனார் என்பதையும் பதிவுசெய்கிறேன். எனவே சகோதரத்துவம் போற்ற... சமூகநீதி காக்க...மக்கள் செல்வர் தலைமையில் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்து சாதி, மத பேதமின்றி அணி திரள்வோம்...வாரீர்...வாரீர்...

No comments:

Post a Comment