www.facebook.com/TTV.Dhinakaran.AMMA

மாண்புமிகு அம்மா, சின்னம்மா ஆசியுடன், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக துணை பொதுச்செயலாளர் TTV தினகரனுக்கு, அமைச்சர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர், திரளான கழகத் தொண்டர்களுடன் தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் : பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரனை மகத்தான வெற்றிபெறச் செய்வோம் என தொகுதி மக்கள் உறுதி



சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு அம்மா, சின்னம்மா ஆசியுடன் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன், இரண்டாவது நாளாக நேற்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அமைச்சர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவினர், திரளான கழகத் தொண்டர்களுடன் தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா ஆசியுடனும், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் வாழ்த்துகளோடும் "அ.இ.அ.தி.மு.க. அம்மா" சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் திரு. TTV தினகரன், வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின் பிரச்சாரத்தை தொடங்கினார். தொப்பி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபோது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

மறைந்த மாண்புமிகு அம்மா பெரும்புகழ் சேர்த்த "இரட்டை இலை" சின்னத்தை திட்டமிட்டு முடக்க காரணமாக இருந்த மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு, கழகத்திற்கு துரோகம் செய்த ஓ.பி.எஸ்-க்கும் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் - சதியை முறியடித்து, இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம் என கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சூளுரை

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் ஆசியோடும், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மாவின் வாழ்த்துகளுடனும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திரு. TTV தினகரனுக்கு, பொதுமக்களிடையே தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. திரு. TTV தினகரனுக்கு தொப்பி சின்னத்தில் வாக்களித்து, பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறச் செய்வோம் என தொழிலாளர்கள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட தொகுதி மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் அம்மாவுக்கு பிறகு கட்சியை காப்பாற்றவே வாழும் சின்னம்மாவுக்கு துணை நிற்க கழக வேட்பாளர் டிடிவி தினகரனின் வெற்றிக்கு அனைத்து அம்மாவின் விசுவாசிகளும் பாடுபடவேண்டும் : நடிகை விஜயசாந்தி வேண்டுகோள்



மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வென்ற, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத்தொகுதியில், அம்மாவுக்கு பிறகு, கட்சியை காப்பாற்றவே வாழும் சின்னம்மாவுக்கு துணை நிற்க, கழக வேட்பாளர் திரு. டிடிவி தினகரனின் வெற்றிக்கு, கழகத்தொண்டர்களும், அனைத்து அம்மாவின் விசுவாசிகளும் பாடுபடவேண்டும் என நடிகை விஜயசாந்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான விஜயசாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிரிகள் செய்த சூழ்ச்சியில், சின்னம்மா பட்ட துன்பங்களையும், சந்தித்த சவால்களையும், செய்த தியாகத்தையும் மறக்கமுடியாது என குறிப்பிட்டுள்ளார். 

கழகத்தை காப்பாற்ற சின்னம்மா அனுபவித்த துன்பங்களுக்கு தீர்வுகாண வேண்டும் என்றால், ஆர்.கே. நகர் தொகுதியில், கழகத்தை வெற்றிபெற செய்வதுதான் வழி என குறிப்பிட்டுள்ள விஜயசாந்தி, கழக வேட்பாளர் திரு. டிடிவி தினகரனை வெற்றிபெற செய்ய தொண்டர்கள் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

ஆர்.கே. நகர் தொகுதியில், எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் தாம் வெற்றி பெறுவது உறுதி : அ.இ.அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை

ஆர்.கே. நகர் தொகுதியில், எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் தாம் வெற்றி பெறுவது உறுதி என, அ.இ.அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வேட்பு மனு தாக்கல் : புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் தினகரன் ஆசிப் பெற்றார்


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் தமது வேட்பு மனுவை வைத்து அவர் ஆசிப் பெற்றார். 

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், இன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு, தலைமைக்கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா நினைவிடத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், வேட்பு மனுவை வைத்து ஆசி பெற்றார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் - மாண்புமிகு அம்மாவின் கனவுத்திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் : அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் உறுதி


மக்களின் உழைப்பால், முயற்சியால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும், மாண்புமிகு அம்மாவின் கனவுத்திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அ.இ.அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். 

சென்னை தண்டையார்பேட்டையில் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில், கழக துணைப் பொதுச் செயலாளரும், வேட்பாளருமான திரு. டிடிவி. தினகரன், முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் உரையாற்றிய கழக துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி. தினகரன், மக்களின் உழைப்பால், முயற்சியால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார். முன்னதாக, ஆர்.கே.நகர் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க சட்டமன்ற தலைமைத் தேர்தல் பணிமனையை முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மற்றும் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பெருகும் மக்கள் ஆதரவு - மாண்புமிகு அம்மா மற்றும் சின்னம்மா ஆசி பெற்ற டிடிவி தினகரனை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என தொகுதி மக்கள் திட்டவட்டம்





மாண்புமிகு அம்மா மற்றும் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா ஆசியுடன் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு மக்களிடையே தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. திரு. டிடிவி தினகரனை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் அத்தொகுதியில் வசிக்கும் மீனவர்கள், இளைஞர்கள், உட்பட பல்வேறு தரப்பினரும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். 

இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு

சின்னம்மாவுக்கு ஆதரவாக 122 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பி.க்கள், 95 சதவீத செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தபோதிலும், இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சின்னம்மா இரட்டை இலையின் சின்னத்தை மீட்டெடுப்பார் என அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.